திருமணத்திற்கு முன்பே உறவு வச்சிகிறது உங்களுக்கு வேணா சகஜமா இருக்கலாம்!.. வாயை கொடுத்து சிக்கிய குஷ்பு!.

Actress kushbhu: தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே பெரும் வரவேற்பை பெற்ற, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை என்றால் அது குஷ்புதான். குஷ்புவை மிகவும் பிடித்துப்போய் அந்த சமயத்தில் அவருக்காக ரசிகர்கள் கோவில் எல்லாம் கட்டினர்.

ஆனால் தற்சமயம் அரசியலுக்கு சென்ற பிறகு குஷ்புவின் செயல்பாடுகள் அவ்வளவு ஆக்கப்பூர்வமாக இல்லை. அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார் குஷ்பு. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு பெண்கள் உறவு கொள்வதை குறித்து இவர் சில விஷயங்களை பேசினார்.

Social Media Bar

அதில் கூறும்போது திருமணத்திற்கு முன்பே உறவு என்பது தற்சமயம் அதிகரித்துள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் கூட ஆணுறை விற்கப்படுகிறது என அவர் பேசியிருந்தார். குஷ்பு இப்படி பேசியிருப்பது தமிழ்நாட்டு பெண்கள் குறித்து இகழ்ச்சியாக பேசுவதாக தோன்றியதால் சமூக வலைத்தளங்களில் இதுக்குறித்து கேள்வி எழுப்ப துவங்கினர்.

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் அனைத்து தமிழ்நாட்டு பெண்களையும் அவரை போலவே நினைத்துவிட்டார் குஷ்பு. குஷ்புவிற்கு வேண்டுமானால் திருமணத்திற்கு முன்பே உறவு என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். அதற்காக அனைத்து தமிழ்நாட்டு பெண்களையும் அப்படி பேசக்கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.