Hollywood Cinema news
யார் இந்த ஹயாஓ மியாசகி… தொடர்ந்து வரும் ஏ.ஐ கார்ட்டூன்களின் தந்தை..!
இப்போது சாட் ஜிபிடி மாதிரியான ஏ.ஐகளில் நமது புகைப்படங்களை கொடுத்து ஜிப்லி ஸ்டைல் படமாக மாற்றி வருகிறோம். ஆனால் இந்த ஜிப்லி ஸ்டைல் என்பதற்கு பின்னால் ஒரு வரலாறும் கதையும் உள்ளது
வால்ட் டிஸ்னி கார்ட்டூன் என்கிற ஒரு விஷயத்தை உருவாக்கிய பிறகு உலகம் முழுக்க அதன் அலை பரவி வந்தது. ஆனால் உலகம் முழுக்க உருவான கார்ட்டூன்களில் வால்ட் டிஸ்னியின் தாக்கமே அதிகமாக இருந்தது.
இந்த நிலையில்தான் ஜப்பானில் ஹயோஓ மியாசகி என்கிற ஓவியர் புது வகையான கார்ட்டூனை உருவாக்கினார். இதுவரை வந்த கார்ட்டூன்களில் இருந்து அவரது கார்ட்டூன் தனித்துவமாக இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஹயோஓ மியாசாகியின் முதல் கார்ட்டூன் படமான Nausicaä of the Valley of the Wind, என்கிற திரைப்படம் வந்தது.
இந்த திரைப்படத்தை தயாரித்த நிறுவனம்தான் ஸ்டுடியோ ஜிப்லி. ஸ்டுடியோ ஜிப்லி மியாசகி மற்றும் சிலர் சேர்ந்து உருவாக்கிய நிறுவனமாகும்.
இதனை தொடர்ந்து வித்தியாசமான அனிமே கார்ட்டூன்களை உருவாக்க துவங்கினார் மியாசகி. மியாசாகியை பொறுத்தவரை அவருக்கு தொழில்நுட்பம் மீது அவ்வளவாக ஈர்ப்பு கிடையாது.
1985 ஆம் ஆண்டு கைகளால் ஓவியத்தை வரைந்துதான் கார்ட்டூன் படங்களை இவர் உருவாக்கினார். இப்போது வரை அதையேதான் செய்து கொண்டுள்ளார். எவ்வளவோ அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பிறகும் கூட மியாசாகி கைகளாலேயே தனது கார்ட்டூன்களை வரைகிறார்.
அவருடைய கார்ட்டூன்களுக்கும் கூட தனிப்பட்ட வரவேற்பு இருக்கிறது அவர் இயக்கிய திரைப்படங்களில் ஸ்ப்ரிட்டட் அவே. த பாய் அண்ட் த ஹெரான் மாதிரியான படங்கள் அதிக விருதுகளை வாங்கியுள்ளன. ஆனால் மை நெய்பர் டொடொரோ என்கிற படம்தான் அவர் படத்தில் மிக பிரபலமான திரைப்படமாகும்.
அதனால்தான் அவரது கார்ட்டூன்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
