Connect with us

விஜயகாந்தை ப்ளான் பண்ணிதான் அப்படி பழிவாங்குனாங்க ஜெயலலிதா.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே…

vijayakanth jayalalitha

Latest News

விஜயகாந்தை ப்ளான் பண்ணிதான் அப்படி பழிவாங்குனாங்க ஜெயலலிதா.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே…

நம் அனைவருக்கும் நடிகர் விஜயகாந்தை பற்றி தெரியும். மேலும் இவரை மக்கள் கேப்டன் விஜயகாந்த் என்று தான் கூறுவார்கள். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் நடிகராக இல்லாமல் நிஜத்திலும் நடிகராக வாழ்ந்து சென்றார்.

சினிமாவில் சாதித்த கேப்டன் விஜயகாந்த். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலில் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அவர் சமீபத்தில் இறந்த செய்தியை கேட்டு தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த வேதனை அடைந்தார்கள். பல கட்சித் தலைவர்கள். மக்கள் என அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது விஜயகாந்தை பற்றி பிரபல அரசியல்வாதி ஒருவர் பேசி இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அரசியலில் விஜயகாந்த்

தேமுதிக என்னும் கட்சியை தொடங்கி அதன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார் விஜயகாந்த். தன்னை தேடி வரும் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து அவர்களின் பசியை போக்கி அனுப்பி வைக்கும் ஒரு நல்ல குணம் படைத்தவர் விஜயகாந்த்.

தேமுதிக கட்சியை தொடங்கிய ஆறு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் அமர்ந்தார். நடிகர் விஜயகாந்த்.

முதலில் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரான பிறகு, இரண்டாவது முறையாக போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். தவறை நேருக்கு நேர் சுட்டிக்காட்டும் விஜயகாந்த் பலமுறை சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது பெரும் பரபரப்பை அப்பொழுது கிளப்பியது.

Vijayakanth

மீண்டும் 2011 இல் நடைபெற்ற சட்ட பேரவை தேர்தலில் விஜயகாந்தின் செல்வாக்கை கருத்தில் கொண்டு அதிமுக அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கியது. இதில் 29 தொகுதிகளில் வென்று திமுக வை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி என்ற பதவியில் அமர்ந்தார் விஜயகாந்த்.

மேலும் விஜயகாந்த்திற்கும், ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்ட கருத்து முதல் காரணமாக அதிமுக தேமுதிக கூட்டணி முறிவுக்கு வந்தது. இவ்வாறு தேர்தல் களத்தில் அனல் பறக்க செயல்பட்டு கொண்டு இருந்த விஜயகாந்த் பற்றி பிரபல அரசியல் தலைவர் ஒருவர் கூறியது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பகுஜன் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, முன் விரோதம் காரணமாக அவரின் வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் விஜயகாந்தை பற்றி கூறியிருக்கும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆம்ஸ்ட்ராங் கூறியிருப்பதாவது, விஜயகாந்த் இரவில் குடிக்கிறார் என ஜெயலலிதா கூறினார். மறுநாள் அதற்கு விஜயகாந்த் மறுப்பு தெரிவித்து, அந்த அம்மா தான் எனக்கு வந்து ஊத்தி கொடுத்தாங்க எனக்கு கூறியிருக்கிறார்.

armstrong

இவ்வாறு மோதிக் கொண்ட பிறகும் ஜெயலலிதா விஜயகாந்தை கூப்பிட்டு இரண்டு இரவு, ஒரு பகல் முழுவதும் பேசி அவரின் கட்சிக்கு 42 சீட்டு கொடுத்ததாகவும், அதில் 29 தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த்.

பிறகு ஆறு மாதங்களிலேயே நாக்கை கடித்துக் கொண்டு சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்து விட்டார். அவ்வளவுதான் அதன் பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் தனியாக இருக்கும் பொழுது இருந்த செல்வாக்கு, கூட்டணியுடன் சேரும்பொழுது அவர் அடையாளமே தெரியாமல் சென்றுவிட்டார். கூட்டணி மட்டும் வைக்காமல் திமுக, அதிமுகவிற்கு மாற்றுக் கட்சி நாங்கள் எனக் கூறியிருந்தால், இந்நேரம் விஜயகாந்த் முதலமைச்சராக இருப்பார் என பகுஜன் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூறியிருக்கிறார்

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top