News
கண்ணாமூச்சு காட்டும் கப்பலூர் சுங்க சாவடி… ஆர்.டி.ஐயில் வந்த அதிர்ச்சி தகவல்..!
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் நெடுஞ்சாலையில் மதுரைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடி தான் கப்பலூர் சுங்க சாவடி.
இந்த சுங்கச்சாவடி அமைத்தது தொடர்பாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் சுங்கச்சாவடி விதிமுறைகளைப் பொறுத்தவரை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருமுறைதான் இந்த சாவடி வைக்க வேண்டும்.
ஆனால் கப்பலூரை பொறுத்தவரை 45 கிலோமீட்டருக்கு பிறகு இந்த கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதை மக்கள் எதிர்த்து வலுவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே அந்த சுங்க சாவடியை நீக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மத்திய அரசிடமும் இது குறித்து கோரிக்கை வைத்திருக்கின்றனர். மாநில அரசு தரப்பில் பேசும் பொழுது தொடர்ந்து அந்த சுங்க சாவடிக்கை நீக்க பரிந்துரை செய்து வந்ததாக அவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் இப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த சுங்கச்சாவடி பற்றிய தகவல்களை வாங்கும் போது சில திடுக்கிடும் தகவல்களை பார்க்க முடிகிறது. அதாவது தமிழ்நாடு அரசு ஒருமுறை கூட சுங்கச்சாவடியை நீக்குமாறு பரிந்துரை செய்யவில்லை என்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர் மேலும் மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்து இந்த விஷயம் குறிதது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் அப்பகுதி மக்கள்.
