News
தனுஷ் இனிமே நடிக்க கூடாது.. நோட்டீஸ் விட்ட தயாரிப்பாளர் சங்கம்… சப்போர்ட்டுக்கு வந்த நடிகர் கார்த்தி!.
தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்துவரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவர் அதிகமாக உருவ கேலிக்கு உள்ளானாலும் கூட பிறகு தொடர்ந்து தனது நடிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் மத்தியில் தன்னை ஒரு பிரபலமான நடிகராக மாற்றிக் கொண்டார் தனுஷ்.
இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியானது. ராயன் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் இது இல்லாமல் தனுஷ்க்கு ஒரு புது பிரச்சனை தற்சமயம் உருவாகி இருக்கிறது.
தனுஷிற்கு கிடைத்த வரவேற்பு:
தனுஷை பொருத்தவரை அவர் ஒரு திரைப்படத்தின் கதையை கேட்டு அந்த கதை நன்றாக இருக்கிறது என்று தோன்றினால் அதற்கு அட்வான்ஸ் தொகையை வாங்கி விடுவார். ஏனெனில் அப்பொழுதுதான் அந்த கதை வேறு யாரிடமும் செல்லாது.
அதிகபட்சம் தனுஷ் பிடித்த கதைகளை இந்த மாதிரி பிடித்து வைத்துக் கொள்வார். பிறகு நேரம் கிடைக்கும் பொழுது அந்த படங்களில் நடித்து கொடுத்து விடுவார். ஆனால் இதே முறையை நிறைய தயாரிப்பு நிறுவனங்களிடம் அவர் பின்பற்றியதாக கூறப்படுகிறது என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து இனிமேல் தனுஷின் படத்தை தயாரிக்க கூடாது என்ற முடிவு செய்திருக்கின்றனர். மேலும் புது தயாரிப்பாளர்கள் யாராவது தனுஷை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்றால் முதலில் அது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச வேண்டும்.
கார்த்தி கூறிய பதில்:
அதற்கு முன்பு தனுஷ் ஏற்கனவே அட்வான்ஸ் தொகை வாங்கி இருக்கும் படங்களை எல்லாம் முதலில் முடித்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த விஷயம் பரபரப்பாகி வந்தது.
இதனை அறிந்த நடிகர் கார்த்தி உடனே செயற்குழு கூட்டத்தை கூட்டி இருக்கிறார், இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது தனுஷ் குறித்து எந்த ஒரு பிரச்சனையையும் நடிகர் சங்கத்திடம் வந்து தயாரிப்பாளர் சங்கம் கூறவே இல்லை.
முதலில் ஒரு நடிகர் குறித்து ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்றால் எங்களிடம் கலந்து ஆலோசித்து பேச வேண்டும். என்ன ஏது என்றே விஷயத்தை கூறாமல் அவர்கள் இஷ்டத்திற்கு முடிவு எடுத்திருக்கிறார்கள் இதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்த பிறகு மீதியை கூறுவோம் என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி.
