News
வீரப்பனை பற்றி தப்பாவா சீரிஸ் எடுக்கிறீங்க!.. நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிராக இறங்கிய சீ5 – கூஸ் முனிசாமி வீரப்பன் தொடர்!.
Koose Munisamy Veerappan : தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் என அறியப்படும் நபர்களில் மிகவும் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு சந்தனம் கடத்துதல், யானை தந்தங்களை கடத்துதல் போன்ற விஷயங்களை செய்து வந்தார்.
இதற்கு எதிராக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு அரசுகளும் ஒன்றிணைந்து பல நாட்களாக தேடி அவரை கொன்றது. இந்த நிலையில் வீரப்பன் நல்லவரா கெட்டவரா என்கிற ரீதியான பேச்சுக்கள் இன்றும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு பக்கம் வீரப்பன் ஆயிரக்கணக்கான யானைகளை கொண்ட ஒரு மோசமான நபராக பார்க்கப்படுகிறார் வீரப்பன். மற்றொரு பக்கம் தன் மக்களுக்காக போராடிய ஒரு போராளியாகவும் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் இடையில் வீரப்பன் குறித்து netflix நிறுவனம் ஒரு சீரிஸ் ஒன்றை எடுத்தது.

அதில் வீரப்பன் செய்த அநீதிகளை வெளி கொணரும் வகையில் அந்த சீரிஸ் இருந்தது அதாவது போலீஸ் காவல்துறை மீது வீரப்பன் நிகழ்த்திய வன்முறை மற்றும் அவரது மக்கள் மத்தியிலேயே சிலர் அவருக்கு எதிராக இருந்தனர். ஏனெனில் அவர் சில இடங்களில் சர்வாதிகாரித்தனமாக நடந்து கொண்டதாக அந்த சீரியஸில் காட்டப்பட்டிருந்தது.
அதே சமயம் காவல்துறை அங்கே இருந்த பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன இருந்தாலும் வீரப்பனுக்கு எதிரான விஷயங்களை அந்த தொடரில் அதிகமாக இருந்தது என்ன நிலையில் ஜி5 நிறுவனம் கூஸ் முனுசாமி வீரப்பன் என்கிற புது தொடரை எடுத்துள்ளது.

இந்த தொடர் முழுக்க முழுக்க வீரப்பன் மற்றும் அவரது கூட்டத்தாரின் பார்வையில் இருந்து செல்வதாக கூறப்படுகிறது. இதில் வீரப்பன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறும் வகையில் சீரியஸ் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அந்தப் பழங்குடி இன மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை மேலும் விரிவாக பேச இருப்பதாக கூறப்படுகிறது.
ஜி 5 இதற்கு முன்பு எடுத்த எந்த டாக்குமெண்டரியும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் இதில் வீரப்பன் குறித்து காணக்கிடைக்காத வீடியோக்கள் இடம் பெறுவதால் இதற்கு வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது.
