Salem TVK: கரூர் சம்பவத்திற்கு பிறகு வெகு காலங்களாகவே எந்த ஒரு கூட்டத்தையும் நடத்தாமல் இருந்து வந்தது த.வெ.க. கரூரில் 41 பேர் இறந்ததை அடுத்து சில மாதங்கள் த.வெ.க கழகம் அமைதியாக இருந்தது என்றே கூறலாம்.
இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு த.வெ.க இரண்டாண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் சின்ன அறையில் அதற்கான விழாவை நடத்தினர். இந்நிலையில் சேலத்தில் மக்களுக்கான பொதுக்கூட்டத்தை இன்று நடத்துவதற்கு அனுமதி வாங்கியிருந்தது த.வெ.க

3000 பேருக்கு மட்டும் டிக்கெட் விநியோகம் செய்து அவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என பலதரப்பட்ட கட்டுபாடுகள் வைக்கப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் கூட இன்று மகராஷ்ட்ராவை சேர்ந்த சுராஜ் என்பவர் சேலம் த.வெ.க கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் சுராஜ். பல காலங்களாக தமிழக வரலாற்றில் அரசியல் கூட்டங்கள் என்பது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் விஜய் கூட்டத்தில் மட்டும் ஏன் அசாம்பாவிதங்கள் அதிகமாக நடக்கின்றன? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.
வேலைவாய்ப்பு செய்திகளை பெற க்ளிக் செய்யவும்
Read: ஒரே செகண்டில் அழியும் உலகம்.. காப்பாற்றும் விஞ்ஞானி.. Dr. Stone Anime Tamil Dubbed Series Story








