அதிக சம்பளம் தரலாம்னு இருந்தேன்.. வாயை விட்டு நீயே மாட்டிக்கிட்ட.. பொன்னம்பலத்தை ஏமாற்றிவிட்ட இயக்குனர்..!

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்து வருபவர் பொன்னம்பலம். பொன்னம்பலம் அப்போதெல்லாம் வில்லனாக நடித்த திரைப்படங்களில் அவரை பார்க்கும் பலருக்கும் அவர் மேல் ஒரு பயம் உண்டாகும் என்று கூறலாம்.

அந்த அளவிற்கு மோசமான ஒரு வில்லனாக அவர் நடித்திருப்பார். ஆனால் வில்லனாக நடிப்பதற்கு முன்பிருந்தே ஸ்டண்ட் மேனாக சினிமாவில் இவர் பணியாற்றி வந்தார். இப்போது வரை சினிமாவில் படப்பிடிப்பில் ஏதாவது ஒரு அசாம்பாவிதம் நடந்தால் அந்த நபருக்கு தயாரிப்பு நிறுவனம் எந்த உதவியும் செய்வதில்லை.

வில்லனாக அறிமுகம்:

அதே நிலைதான் பொன்னம்பலம் காலத்திலும் அப்படியும் கூட உயிருக்கு ஆபத்தான அந்த தொழிலை செய்துக்கொண்டுதான் இருந்தார் பொன்னம்பலம். இந்த நிலையில்தான் அவருக்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

Social Media Bar

பஞ்சு அருணாச்சலம் திரைப்படத்தில் அவருக்கு 10 நாள் கால்ஷீட் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த பொன்னம்பலம் ஐயா ஸ்டண்ட் மேனுக்கு கொடுக்குற மாதிரி 500, 600 சம்பளத்துக்கு எல்லாம் என்னால நடிக்க முடியாது. 2000 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமா தரணும்.

சம்பள விஷயம்:

அப்பதான் நடிப்பேன் என கூறியுள்ளார். அதனை கேட்ட பஞ்சு அருணாச்சலம். நல்ல வேளை நீ 5000 கேப்பன்னு நான் நினைச்சேன் என கூறியவர் 20,000 ரூபாயை கொடுத்து இந்தா 10 நாள் காசு திருப்தியா வச்சிக்கோ என கொடுத்துள்ளார்.

வாயை விடாமல் இருந்திருந்தால் தினசரி 5000 ரூபாய் கிடைத்திருக்குமே என பிறகு புலம்பியிருக்கிறார் பொன்னம்பலம்.