Cinema History
கேப்டனை அவமதிச்சா இவ்வளவு பிரச்சனை உண்டா.. வில்லன் நடிகருக்காக ரசிகர் மன்றத்தோடு மீட்டிங் போட்ட விஜயகாந்த்.. புது நியுசா இருக்கே..!
நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து நடிகர்களுக்கு நன்மை செய்து வந்த நடிகராக நடிகர் விஜயகாந்த் இருந்து வருகிறார். கதாநாயகனாக நடித்து வந்த விஜயகாந்த் பெரும்பாலும் மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லும் வகையில்தான் நடித்து வந்தார்.
அதிகப்பட்சம் விஜயகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்களில் அரசு அதிகாரியாக இருப்பதை பார்க்க முடியும். விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்ட பிறகுதான் அவர் திரை உலகிற்கும் மக்களுக்கும் செய்த நன்மைகள் எல்லாம் வெளியில் வர துவங்கின.
நடிகர்களிலேயே அதிக மரியாதைக்குரிய நடிகராக இருந்ததால் விஜயகாந்துக்கு படத்தில் காட்சிகள் வைப்பதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. அவருக்கு மரியாதை குறைவான காட்சிகளை வைக்க கூடாது என்பதில் அவரை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் தெளிவாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தவசி திரைப்படத்தில் ஒரு காட்சியில் பொன்னம்பலத்தின் செருப்பை விஜயகாந்த் கழுவுவது போல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியால் பிரச்சனை வரும் என்பதால் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பே ரசிகர் மன்றத்தில் முக்கிய பொருப்பில் இருந்தவர்களோடு மீட்டிங் போட்டுள்ளார் விஜயகாந்த்.
அதில் பொன்னம்பலம் அந்த காட்சியில் நடித்தால் ஓ.கே என அவர்கள் கூறியப்பிறகுதான் அந்த காட்சிக்கு அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நிகழ்வை பொன்னம்பலம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
