Entertainment News
கஷ்டப்பட்டு கிடைச்ச வாய்ப்பு.. தட்டி பறித்த பிரபல நடிகை! – யாரை சொல்கிறார் ரகுல் ப்ரீத் சிங்?
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரகுல் ப்ரீத் சிங். பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் முதலில் தமிழில் தடையற தாக்க படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி உள்ள அய்யலோன் திரைப்படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். ஆனால் சினிமா துறையில் தான் தொடர்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வந்ததாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு கனவு. சினிமா துறை குறித்து தெரியாமலே மாடலிங்கில் இருந்து மிஸ் இந்தியா பட்டம் வென்று பின்னர் அங்கிருந்து சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் எத்தனையோ சறுக்கல்கள் நிராகரிப்புகளை எதிர்கொண்டேன்.
இருந்தாலும் மனம் தளராமல் ஆடிஷனுக்காக வரிசையில் நிற்பது வாய்ப்புகளுக்காக இயக்குநர்களுக்கு தொடர்ந்து கால் செய்வது என்று முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தேன். சில படங்களுக்கு நான் ஒப்பந்தமாகி கையெழுத்து போட்ட பின்னரும் அந்த இடத்தை வேறு சிலர் எடுத்துக் கொண்ட சம்பவங்களும் நடந்தது. ஆனாலும் தொடர் முயற்சியால் இன்று அனைவரின் மனதிலும் நாயகியாக இடம் பிடித்துள்ளேன். இந்த பயணத்தில் உள்ள பிரச்சனைகள் எனக்கு அழகான பாடத்தை கற்றுக் கொடுத்தது“ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்க இருந்ததாகவும் பின்னர் அந்த கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன் வாய்ப்புகளை சிலர் தட்டி பறித்து கொண்டதாக ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.