Actress
என்ன ஆச்சு நம்ம ரித்திகா சிங்கிற்கு.. கவர்ச்சி அதிகமாயிட்டே இருக்கு..!
தமிழில் இறுதி சுற்று திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திஹா சிங். வட இந்தியாவை சேர்ந்த இவர் அப்போது குத்து சண்டையில் பயிற்சி பெற்றவராக இருந்தார். எனவே இறுதி சுற்று திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு குத்து சண்டையை விடவும் ரித்திஹா சிங்கிற்கு சினிமா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அது அவரது மார்க்கெட்டை மேலும் அதிகரித்தது. தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
அதற்கு பிறகு அவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. சமீபத்தில் கூட வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார் ரித்திஹா சிங். இந்த நிலையில் சமீப காலங்களாக இவர் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
சினிமாவில் வாய்ப்புகளை வாங்குவதற்காகதான் ரித்திஹா சிங் இப்படி செய்கிறார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
