salaar

3 மணிநேர படத்துல ஹீரோ அதை பண்ணவே இல்ல!.. சலார் படத்தில் புது சாதனை படைத்த இயக்குனர்!..

News Tamil Cinema News

Salaar Movie: தென்னிந்தியாவில் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவராக பிரசாந்த் நீல் இருக்கிறார். அவர் இயக்கி இந்திய அளவில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படம் கே.ஜி.எஃப். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்து இயக்கி வந்த திரைப்படம் சலார்.

இதனாலேயே சலார் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவல் அதிகமானது. சலார் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படம் கே.ஜி.எஃப் மாதிரி இல்லாமல் இரு நண்பர்களின் நட்பை பேசும் திரைப்படமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று பாகத்திற்கு ப்ளான் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் மட்டுமே தற்சமயம் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் சரி , கன்னடத்திலும் சரி பொதுவாகவே கதாநாயகர்கள் அடுக்கடுக்காக பஞ்ச் டயலாக் பேசுவார்கள்.

salaar2
salaar2

அதனாலேயே புதிதாக திரைப்படம் பார்க்க போகிறவர்களுக்கு திரைப்படம் மீதே கோபம் வந்துவிடும். ஆனால் சலார் திரைப்படத்தில் அந்த விஷயத்தில் சிறப்பான ஒன்றை செய்திருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதாவது இந்த படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். அதில் மொத்தமாகவே 2 நிமிடம் 33 நொடிகள்தான் நடிகர் பிரபாஸ் பேசியிருக்கிறார்.

மீத நேரங்களில் அமைதியாகவே இருந்து வரும் ஒரு கதாபாத்திரமாக இருந்து வருகிறார். ஆக்‌ஷன் படத்தில் கதாநாயகனுக்கு டயலாக்கே கொடுக்காமல் மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.