News
பாலிவுட்டை அலறவிட்ட தண்ணீர் கேட்கும் பேய்… காதல் நடிகையின் லெவலே இனி வேற மாறி!.
ஆஷிக் 2 என்கிற திரைப்படம் மூலமாக ஹிந்தி சினிமாவிலும் இந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரதா கபூர். ஸ்ரதா கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆஷிக் 2 திரைப்படத்தில் அவருக்கு சிறப்பான காட்சிகளும் கதை அமைப்புகளும் இருந்தது.
அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமே அவர்தான் என்பதால் அந்த படம் அவரை வெகுவாக தூக்கிவிட்டது. அதனை தொடர்ந்து ஓ.கே கண்மணி திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷனான ஓகே ஜானு திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஷ்ரதா கபூர்.
ஸ்ரதா கபூர்
அதில் மிக கவர்ச்சியாக அவர் நடித்திருந்தாலும் க்யூட்டான அவரது லுக்கிற்கு அடிமையான ரசிகர்கள் அந்த திரைப்படத்தை வெற்றி படமாக மாற்றினார்கள். அதனை தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் ஸ்ரதா கபூர்.

அதிகபட்சமாக அவர் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே ஸ்ரதா கபூர் முக்கிய கதாநாயகியாக நடித்த ஸ்திரி என்கிற திரைப்படம் ஹிந்தியில் வெளியானது. இந்தியா முழுவதும் உள்ள நாட்டார் பேய் கதைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. ஊருக்குள் இருக்கும் தண்ணீர் கேட்கும் பேய், தலையில் ஏறும் பேய் போல இந்த படத்திலும் ஒரு பேய் இருந்தது.
அந்த திரைப்படத்தின் கதைப்படி அந்த கிராமத்தில் ஒரு பேய் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கும். அது ஆண்கள் 6:00 மணிக்கு மேலே வெளியே வந்தால் அவர்களை தூக்கி சென்று விடும். அவர்களது ஆடைகளை மட்டும் போட்டுவிட்டு சென்றுவிடும்.
மறுநாள் காலையில் அவர்களது ஆடை மட்டும் கிடைக்கிறது என்றால் அந்த பேய் அவர்களை தூக்கி சென்று விட்டது என்று அர்த்தமாகும். வெளியில் செல்பவர்களை மட்டுமல்லாமல் வீட்டுக்குள்ளும் வந்து அந்த பேய் ஆண்களை கவர்ந்து செல்லக்கூடியது.
ஸ்திரி திரைப்படம்
இதனால் ஒவ்வொரு வீட்டிலும் நாளை வா என்று சிவப்பு நிற மையால் எழுதி வைத்திருப்பார்கள். அப்படி எழுதப்படாத வீடுகளுக்குள் அந்த பேய் புகுந்து விடும். இந்த நிலையில அந்த பேயை அடக்கும் மந்திரவாதியாக ஸ்ரதா கபூர் அந்த கிராமத்திற்கு வருவார் அதை வைத்து அந்த படத்தின் கதை செல்லும்.

இந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது இந்த படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த இரண்டாம் பாகம் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றிருக்கிற.
அந்த திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது பொதுவாக பெரிய பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மட்டும் தான் இப்படியான ஒரு வசூலை கொடுக்கும். இது பாலிவுட்டில் இருக்கும் மற்ற நடிகைகளை பொறாமை பட வைக்கும் விஷயமாக அமைந்திருக்கிறது ஏற்கனவே பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட இப்படியான ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்தது கிடையாது இதனால் அதிக பிரபலம் அடைந்திருக்கிறார் ஸ்ரதா கபூர்.
