முதல் முறையாக சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!

சாதாரணமாக திரைப்படம் இயக்குகிறேன் என்று இல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும்.

அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்தார். உலக அளவில் மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார்.

Social Media Bar

ஆனால் சூர்யாவுடன் கால்ஷூட் கிடைக்காத காரணத்தால் அவர் அடுத்து நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படம் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே இந்த படம் இதுவரை வந்த வெற்றிமாறன் திரைப்படங்களை விட இந்த படத்திற்கான பட்ஜெட் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சிம்பு வெற்றிமாறன் காம்போ எனும்போதே அதற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கியிருந்தது.

எனவே திரைப்படத்தின் பட்ஜெட்டும் கூட இப்போது அதிகரித்துவிட்டது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.