Tech News
ஜியோ ஏர்டெலுக்கு வந்த ஆபத்து.. இணைய சேவை வழங்க இந்தியாவுடன் பேசும் எலான் மஸ்க்.. இதில் சாதக பாதகங்கள் என்ன?
உலக அளவில் இணையத்தின் வளர்ச்சி என்பது கட்டுக்கடங்காத அளவில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளே தொடர்ந்து இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் அளவிற்கு இணையத்தின் வளர்ச்சியானது உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் ஜியோ ஏர்டெல் மாதிரியான நிறுவனங்கள்தான் இன்னமும் அதில் முன்னிலை வகுத்து வருகின்றன. தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொழில் போட்டியில் நிறைய சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மேலும் பிராட்பேண்ட் கனெக்ஷனில் அடுத்து ஒரு தொழில்நுட்பமாக ஏர் பைபர் என்கிற முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர் இந்த இரண்டு நிறுவனத்தினர். இதற்கு நடுவே தற்சமயம் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்டார்லிங்க் நிறுவனமும் இந்தியாவில் இணைய வசதியை வழங்குவதற்கான வேலையில் இறங்கி இருக்கின்றனர்.
ஸ்டார்லிங்க் நிறுவனமானது மற்ற நிறுவனங்கள் மாதிரி செல்போன் டவர் வழியாக இணையத்தை வழங்காமல் நேரடியாக சேட்டிலைட் மூலமாக இணையத்தை வழங்குகிறது. இதனால் உலகத்தின் எந்த மூளைக்கு சென்றாலும் இணைய வசதி கிடைக்கும் இடத்தில் ஸ்டார்லிங்கின் தொழில்நுட்பம் அமைந்திருக்கிறது.
ஆனால் கட்டண விகிதத்தில் பார்க்கும் பொழுது இந்தியாவில் வசூலிக்கப்படும் இணைய கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறது ஸ்டார்லிங்க் நிறுவனம். எனவே இந்தியாவிற்கு ஸ்டார்லிங்க் நிறுவனம் வருகிறது என்றால் அது கண்டிப்பாக இந்த இரண்டு முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்காது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கிறது.
ஆனால் இந்தியாவிற்கு ஸ்டார்லிங்க் வருகிறது என்றால் அதற்கு தகுந்த கட்டண விகிதத்தில் தான் இணைய கட்டணம் இருக்கும் என்றும் ஒரு பக்கம் பேசப்படுகிறது எப்படி இருந்தாலும் இந்த வருட இறுதியில் ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
