vijay

தளபதியை அசிங்கப்படுத்த நினைத்த விழாக்குழு.. ஒன்று கூடிய நடிகர் குழு.. விஜய்னா சும்மாவா!.

Cinema History News Tamil Cinema News

தமிழ் சினிமா நடிகர்களை பொருத்தவரை அவர்களுக்குள் சினிமாவில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் வெளியிடங்களில் துறை சார்ந்து யாரும் யாரையும் விட்டுக் கொடுத்துக் கொள்வதில்லை.

அப்படி ஆனால் ஒரு சம்பவம் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் நடந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சினிமா நடிகர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நடந்தது.

அதில் இறுதி நாள் நடக்கும் பொழுது சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர்களில் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் அந்த விழாவிற்கு வந்த போது அவருக்கு எந்தவித நாற்காலியும் ஒதுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அமரும் இடத்தில் விஜய்யை அமர வைத்தனர். இது விஜய்க்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது. அதனை பார்த்த விக்ரம், மனோபாலா, சௌந்தர்யா ரஜினிகாந்த் போன்றவர்கள் விஜய்யுடன் போய் சேர்ந்து உட்கார்ந்து கொண்டனர்.

அதனால் அவர்கள் அமர்ந்திருந்த முன் இருக்கைகள் காலியாக இருந்தன. விஜய் அவமானப்படுத்த நினைத்து கடைசியில் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் முன் இருக்கைகள் காலியான சம்பவம் நடந்தது.