வெங்கட்பிரபுவிடம் விஷ்ணுவர்தன் சொன்ன அந்த விஷயம்.. யுவனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் வந்த சண்டை.!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று இருக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் இயக்கிய பில்லா ஆரம்பம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறது.

நயன்தாராவிற்கு தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை விஷ்ணு விஷ்ணுவரதன் கொடுத்திருக்கிறார் இதனாலேயே விஷ்ணுவர்தனுக்கும் நயன்தாராவிற்கும் இடையே நல்ல பழக்கம் இருந்து வருகிறது. அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கி வரும் திரைப்படத்தின் விழாவிற்கு கூட நயன்தாரா சென்றிருந்தார்.

பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா போன்றவற்றிற்கு செல்ல மாட்டார். அப்படி இருக்கும்பொழுது விஷ்ணுவர்தனுக்காக அவரது திரைப்பட விழாவிற்கு இவர் சென்று இருந்தார் நேசிப்பாயா என்கிற அந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் நடித்து வருகிறார்.

Social Media Bar

வெங்கட் பிரபு செய்த வேலை:

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா குறித்து ஒரு விஷயத்தை விஷ்ணுவர்தன் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது யுவன் சங்கர் ராஜா எப்போதுமே எனக்கு மட்டும் நல்ல இசையை போட்டுக் கொடுத்து விடுவார்.

அவரது அண்ணன் வெங்கட் பிரபுவை விடவும் எனக்குதான் அவர் நல்ல இசையை கொடுப்பார். ஒருமுறை அப்படிதான் என் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த பாடலை நான் வெங்கட் பிரபுவிடம் போட்டு காட்டினேன். அதனை கேட்ட வெங்கட் பிரபு மிகவும் அதிர்ச்சியாகி விட்டார். பிறகு அவர் யுவன் சங்கர் ராஜாவிடம் சென்று இதற்காக சண்டையிட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் விஷ்ணுவர்தன்.