rajinikanth sridevi

படப்பிடிப்பில் ரஜினிகாந்துக்கு இருக்கும் அந்த பழக்கம்.. ஸ்ரீதேவி சொன்ன ரகசியம்

Cinema History

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பிரபலமாக இருந்த அதே காலக்கட்டத்தில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பெரும்பாலும் ஸ்ரீ தேவி நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர்.

பலருக்கும் அப்போது கனவு கன்னியாக இருந்து வந்தார் ஸ்ரீதேவி. இந்த நிலையில் அவருக்கு ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. பாலிவுட்டில் அவருக்கு இன்னமும் அதிக வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் சினிமா அந்த காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவை விட முன்னேறி இருந்தது.

அப்போது தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு கேரவன் வசதி எல்லாம் கிடையாது. அந்த வசதி எல்லாம் அப்போதே பாலிவுட்டில் இருந்தது. இந்த நிலையில் ஸ்ரீதேவி பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

rajinikanth
rajinikanth

இந்த நிலையில் ரஜினியுடன் தனது அனுபவங்கள் குறித்து ஸ்ரீ தேவி முன்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் ஸ்ரீ தேவி கூறும்போது எப்போதும் படப்பிடிப்பு நடக்கும்போது திடீர் திடீரென ரஜினிகாந்த் காணாமல் போய்விடுவார்.

இதே போல பாலச்சந்தர் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்தப்போதும் ரஜினியை அடிக்கடி காணவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து நடிகை ஸ்ரீ தேவி பாலச்சந்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாலச்சந்தர் பக்கத்தில் எங்கையாவது கண்ணாடி இருந்தால் போய் பாருங்கள்.

அங்கதான் நிப்பான் என கூறியுள்ளார். அப்போது மேக்கப் அசிஸ்டெண்ட் எல்லாம் கிடையாது என்பதால் ஒவ்வொரு காட்சி முடிந்ததுமே பக்கத்தில் எங்கையாவது கண்ணாடி இருந்தால் அங்கு சென்று முடியை சரி செய்துக்கொண்டு வருவாராம் ரஜினிகாந்த்.

அதைதான் பாலச்சந்தர் அப்படி கூறியுள்ளார்.