இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக கூட்டமாக சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அதில் தமிழில் பரத் சித்தார்த் மாதிரியான நடிகர்கள் எல்லாம் ஓரளவு வரவேற்பு பெற்று நடிக்க சென்றனர்.
ஆனால் அந்த படத்தில் நடித்த மணிகண்டனுக்கு மட்டும் அப்போது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பே காதல் யுகா மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இவர் நடித்தார்.
வெகு காலங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து அவர் பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் போது யுகா திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே எனது தந்தை இறந்து விட்டார்.

நடிகர் மணிகண்டன்:
அவர் நிறைய கடன் வாங்கி வைத்திருந்தார். என்னுடைய சம்பாத்தியத்தை வைத்து அதை ஓரளவு அடைத்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டம் துயரங்களை நான் பார்த்திருக்கிறேன். நான் நிறைய பேரை காதலித்திருக்கிறேன்.
ஆனால் அதில் நிறைய தோல்விகளையும் கண்டிருக்கிறேன். எனக்கு வயது 42 ஆகிவிட்டது. முகநூல் மூலமாக மலேசியா பெண்ணுடன் பேசி பழகினேன். பிறகு அவரை பார்க்க மலேசியாவும் சென்றேன். அங்கு அவர் மூலமாக எக்கச்சக்கமான டார்ச்சர்களை அனுபவித்தேன். பிறகு எப்படியோ தப்பி வந்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார் மணிகண்டன்.