News
வீட்டில் தனியாக இருக்கும்போது அப்படி செய்வேன்!.. அதிர்ச்சி தகவல் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!.
தமிழ் சினிமாவில் சில காலங்கள் மட்டும் பிரபலமாக இருந்த ஒரு சில நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். இவரது குடும்பம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில்தான் பிறந்து வளர்ந்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன். முதன் முதலாக இவர் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார்.

அந்த திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக தமிழ் படம், நான் சிரித்தால் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஐஸ்வர்யா மேனன்.
தனிமையில் செய்வேன்:
இருந்தாலும் அவருக்கு சினிமாவில் வரவேற்பு என்பது அவ்வளவாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் பேசும்பொழுது கடைசியாக நீங்கள் எப்பொழுது கண்ணீர் விட்டு அழுதீர்கள் என தொகுப்பாளர்கள் கேட்ட பொழுது நான்கு மாதத்திற்கு முன்பு நான் கண்ணீர் விட்டு அழுதேன்.

பொதுவாக எல்லோர் முன்னோடியும் நான் அழ மாட்டேன் எப்போதும் தனியாக வீட்டின் அறையில் அமர்ந்து கொண்டுதான் அழுவேன் நான் கண்ணீர் விட்டு அழுது யாரும் என்னை பார்த்ததே கிடையாது இதுவரைக்கும் எனது தாயார் முன்பு கூட நான் கண்ணீர் விட்டு அழுதது இல்லை என்று கூறுகிறார் ஐஸ்வர்யா மேனன்.
