களத்தில் விஜய் இறங்கியதுமே ஆடிப்போன அரசியல் களம்.. ஒரே நாளில் நடந்த சம்பவங்கள்.!

தளபதி விஜய்யின் அரசியல் வருகை என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. உலகம் முழுக்கவே நடிகர்கள்தான் அரசியல் வரலாற்றில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கூட நடிகர் எம்.ஜி.ஆர் அப்படிதான் அரசியலுக்கு வந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே மாதிரி டாப் நடிகராக இருந்து மக்கள் செல்வாக்கோடு அரசியலுக்கு  வருபவராக விஜய் இருந்து வருகிறார்.

விஜய் ஒரு நடிகர் என்பதால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பரந்தூரில் மக்கள் விமான நிலையம் வருவதற்கு எதிராக போராடி வருவதற்கு ஆதரவு தெரிவித்து அங்கு சென்றுள்ளார்.

vijay
vijay
Social Media Bar

அங்கு விஜய் பேசிய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக வைரலானது. இந்த நிலையில் அடுத்ததாக வேங்கை வயலுக்கு செல்ல இருப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய். வேங்கை வயல் கிராமத்தில் குடி தண்ணீரில் மலம் கலந்த விவகாரம் இன்னமும் நிலுவையில்தான் இருந்து வந்தது.

இந்த நிலையில் இதுக்குறித்து விஜய் மக்களிடம் பேச உள்ளதாக கூறினார். இதற்கு நடுவே தற்சமயம் வேங்கை வயலில் மலம் கலந்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

விஜய் வேங்கை வயல் வருகிறேன் என கூறியவுடனேயே துரிதமாக இந்த செயல்பாடுகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் இதுக்குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.