அட்லியுடன் இணையும் அல்லு அர்ஜுன்.. கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன திரைத்துறை.!

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இயக்குனர் அட்லிக்கு ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் நிறைய பெரிய நடிகர்கள் தங்களை வைத்து திரைப்படம் இயக்குமாறு அட்லியிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் அடுத்து தெலுங்கு சினிமாவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்றிருக்கிறார் அட்லீ.

Social Media Bar

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன ஆனால் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை அதிகரித்திருக்கிறார்.

175 கோடி சம்பளம் இதற்காக கேட்டிருக்கிறாராம் அல்லு அர்ஜுன். தெலுங்கு நடிகர்களிலேயே மிக அதிக சம்பளத்தை அல்லு அர்ஜுன்தான் பெற்றிருக்கிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.