News
தனுஷுடன் லூட்டி அடித்த ஆர்த்தி.. பிரபலத்திடம் ப்ளாக்மெயிலில் சிக்கிய ஜெயம் ரவி.. வெளிவந்த சீக்ரெட்.!
சமூக வலைதளங்களில் சமீபகாலமாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வந்தனர் இந்த நிலையில் திடீரென்று சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஆர்த்தி கூறும் பொழுது ஜெயம்ரவி என்னிடம் எந்த விஷயத்தையும் கூறாமலே அவரை விவாகரத்து செய்வதற்கான முடிவுகளை எடுத்திருக்கிறார் என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் இது அதிக சர்ச்சையாக துவங்கியது. இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு புது செய்தியை கூறியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் ஆர்த்தியின் மாமியாருடன் நட்பில் இருந்து வருகிறார் என்பதால் அவர்களிடம் சில விஷயங்களை கேட்டு வாங்கியதாக கூறுகிறார்.
தனுஷுடன் பழக்கம்
அதில் பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது ஆரம்பத்தில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் நன்றாகதான் வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் இடையில் ஒரு பார்ட்டிக்கு அவர் ஆர்த்தியை அழைத்துச் சென்றார். அங்கு ஆரத்திக்கும் தனுஷ்க்கும் பழக்கமானது.
அவர்களது பழக்கம் நெருக்கமானதை அறிந்த ஜெயம் ரவி இதனால் கடுமையாக சண்டையிட்டார். அதற்கு பிறகு தனது மனைவியை மன்னித்த ஜெயம் ரவி நன்றாகதான் வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் தயாரிப்பாளராக இருந்த அவரது மாமியார் தொடர்ந்து அவருக்கு கொடுத்து வந்த இம்சைகள் தான் இப்பொழுது விவாகரத்தில் வந்து நிற்கிறது.
ஏனெனில் ஆர்த்தியின் அம்மா தான் ஜெயம் ரவி நடிக்கும் படங்களை தயாரித்து வந்து கொண்டிருந்தார் .இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தின் பட்ஜெட்டை அவரது மாமியார் ஒழுங்காக வழங்காததால் பாண்டியராஜ் வேறு ஒரு நடிகரை வைத்து அந்த படத்தை இயக்கத் துவங்கி விட்டார்.
இதனால் ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே சண்டை உண்டானது. அதுவே ஆரத்திக்கும் ஜெயம் ரவிக்கும் பிரிவை உண்டாக்கியது. இதனை அடுத்து விவாகரத்து அறிவித்ததால் ஜெயம் ரவியின் பாஸ்போர்ட் மாதிரியான விஷயங்களை எல்லாம் அவரது வீட்டார் எடுத்து வைத்துக் கொண்டனர்.
இதற்காக இப்பொழுது போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார் ஜெயம் ரவி என்று அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
