Latest News
நடுராத்திரி சரக்கை போட்டு இளையராஜாவை தொல்லை செய்த இயக்குனர்!. இளையராஜா கொடுத்த பதில்தான் மாஸ்!.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் ராஜா என்று அழைக்கப்படுபவர்தான் இசையமைப்பாளர் இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசைக்காக வெற்றி கொடுத்த நிறைய படங்களை அப்பொழுது தமிழ் சினிமாவில் உண்டு.
இதனால் சினிமாவில் வேறு எந்த ஒரு இசையமைப்பாளரும் தொடாத உயரத்தையும் இளையராஜா தொட்டார். அதனால்தான் இப்போது வரை இளையராஜாவிற்கு இருக்கும் மதிப்பு என்பது குறையாமல் இருக்கிறது.
இளையராஜா மீது குற்றச்சாட்டு:
இருந்தாலும் பல பிரபலங்களுக்கு இளையராஜா மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது என்னவென்றால் தன்னை விட மற்ற பிரபலங்களுக்கு நன்றாகச் சேமித்து கொடுத்திருக்கிறார் இளையராஜா என்று கூறுபவர்கள் உண்டு.
![ilayaraja](https://cinepettai.com/wp-content/uploads/2024/05/ilayaraja-.jpg)
நடிகர் ரஜினி கூட பல பேட்டிகளில் என்னை விட கமல்ஹாசனுக்கு நிறைய நல்ல இசைகளை கொடுத்திருக்கிறார் இளையராஜா என்று கூறுவார். இப்படி நிறைய பேர் இளையராஜாவை தொடர்ந்து கூறி வந்ததுண்டு. இந்த நிலையில் பாலுமகேந்திராவும் அந்த மாதிரியான ஒரு நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார்.
பாலுமகேந்திரா:
இளையராஜா பாலுமகேந்திராவின் நிறைய படங்களுக்கு இசையமைத்தார். பெரும்பாலும் பாலு மகேந்திரா திரைப்படத்தில் இளையராஜா இசை அமைக்கும் இசைக்கு தனித்துவமான வரவேற்பு இருக்கும்.
![balu-mahendra](https://cinepettai.com/wp-content/uploads/2024/05/balu-mahendra.jpg)
இந்த நிலையில் அந்த திரைப்படத்தை பார்த்த பாலுமகேந்திராவின் நண்பரான ஒரு இயக்குனர் இரவு மது அருந்திவிட்டு இளையராஜாவிற்கு போன் செய்திருக்கிறார். போன் செய்தவர் எனக்கு மட்டும் இந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் நீங்கள் போட்டு தரவில்லையே என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த இளையராஜா நீ முதலில் அந்த திரைப்படம் மாதிரியான திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சி செய். அப்படி செய்யும் பொழுது நானும் அதற்கு தகுந்தார் போன்ற பாடல்களை போட்டுத் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)