Bigg Boss Tamil
சமையற்கட்டில் ஆட்டமோ ஆட்டம்.. பசியில் ஹவுஸ்மேட்ஸ் திண்டாட்டம்! – குழப்பத்தில் விக்ரம்!
பிக்பாஸ் ஏழாவது சீசனில் மெல்ல பரபரப்புடன் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது வாரம் சண்டை காட்சிகள் அரங்கேறி வருகிறது. முதல் வாரத்தில் வீட்டு தலைவராக இருந்த விஜய் வர்மா ஓரளவு அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களையும் சமாளித்தார். ஆனால் இந்த இரண்டாவது வாரத்தில் தலைவராக பொறுப்பேற்றுள்ள விக்ரம் சரவணன் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்.
விக்ரமால் ஸ்மால் ஹவுஸ்க்கு அனுப்பப்பட்ட விஷ்ணு, விஜய், மாயா ஆகியோர் தலைவரான விக்ரமை மதிக்காமல் செயல்படுவதுடன் ஹவுஸ் மேட்ஸ் கேட்கும் உணவுகளையும் சரியாக செய்து தராமல் சும்மா சும்மா சண்டை போட்டு வருகின்றனர். ஆனால் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பிரதீப் இந்த வாரம் மிகவும் பொறுப்பாக சமையல் வேலைகளை எடுத்து செய்து வருகிறார்.
உணவை சரியாக சமைத்து தராததுடன் ’உங்களால ஆனத பாத்துக்கோங்க’ என விஷ்ணு குரூப் பிரச்சனை செய்து வருவதால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் சரியாக சாப்பிட முடியாமல் பட்டினி கிடக்கின்றனர். இது குறித்து வீட்டு தலைவரான விக்ரம் சரவணனிடம் அவர்கள் முறையிட்டு வருகின்றனர். ஆனால் விக்ரம் சரவணன் யாரையும் எதிர்த்துப் பேச முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலேயே இருந்து வருகிறார்.
இதனால் விக்ரம் சரவணனை அழைத்து பேசிய பிரதீப் பிரச்சனை இல்லாமல் சமையல் வேலைகளை சமாளிப்பது குறித்து அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆனால் விக்ரம் சரவணன் பிரச்சினை செய்து வரும் விஷ்ணு குரூப்பை எதிர்த்துப் பேசி வேலையை வாங்கினால் மட்டுமே இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும்.