Cinema History
இவ்வளவு கோடி சம்பாதிக்கிறீங்க.. நடிகர் சங்க கட்டிடம் கட்ட காசு இல்லையா!.. தெளிவாக கேள்வி கேட்ட செந்தில்.
இந்திய வர்த்தகத்தை பொருத்தவரை அதில் கோடிகளில் புழங்கும் ஒரு துறையாக சினிமா உள்ளது. அதிலும் தமிழ் சினிமா அதிகமான கோடிகளை புழங்கும் இடமாக உள்ளது.
முக்கியமாக பெரும் நடிகர்கள் பலரும் நூற்றுக்கும் அதிகமான கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருகின்றனர். இது சாதாரண மனிதர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு நாளைக்கு 800 முதல் 1000 ரூபாய் சம்பளம் பெறுவதற்கே 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் உழைப்பாளிகள் தமிழகத்தில் அதிகமாக உண்டு.
அப்படி இருக்கும் பொழுது வெறும் 45 நாள் 50 நாள் மட்டும் நடித்துவிட்டு ஒரு படத்திற்கு நூறு கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களே என்பது வியப்பூட்டும் விஷயமாகவே உள்ளது. இது தமிழ் சினிமாவிலேயே சில நடிகர்களுக்கு அதிருப்தியைதான் ஏற்படுகிறது.
அப்படியாக பழைய காமெடி நடிகர் செந்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவிக்கும் பொழுது இவ்வளவு நாட்களாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட முடியவில்லை. அதில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது என்கிறார்கள் அதில் முக்கியமான பிரச்சினை அந்த கட்டிடத்தை கட்டுவதற்கான பணம் இல்லை என்பதுதான்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஆளுக்கு 5 கோடி போட்டிருந்தாலே இந்நேரம் அந்த கட்டிடத்தை கட்டி இருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்று நேரடியாகவே ஒரு பேட்டியில் பேசி இருந்தார் செந்தில்.