Connect with us

Director Karthik subbaraj:  உங்க சீனை எல்லாம் படத்துல வச்சுருக்கார்!.. கார்த்திக் சுப்புராஜை ஹாலிவுட் நடிகரிடம் கோர்த்துவிட்ட ரசிகர்!..

karthik subbaraj clint eastwood

Hollywood Cinema news

Director Karthik subbaraj:  உங்க சீனை எல்லாம் படத்துல வச்சுருக்கார்!.. கார்த்திக் சுப்புராஜை ஹாலிவுட் நடிகரிடம் கோர்த்துவிட்ட ரசிகர்!..

Social Media Bar

Jigarthanda Double x : தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியான சமயத்திலேயே அதிக வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தின் கதையைதான் கிட்டத்தட்ட வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு ரவுடியை வைத்து ஒருவர் படம் இயக்குவதுதான் படத்தின் கதையாக இருந்தாலும் அதற்குள் ஆட்சியாளர்களின் அரசியல், காடுகளில் நடக்கும் யானை வேட்டை என்று பல விஷயங்களையும் பேசி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமாக பழங்குடியின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்தும் சில பேசியிருந்தார்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு விஷயம் என்பதையும் தாண்டி அதனால் வரலாற்றில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் பேசி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வருடம் வந்த திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இருந்தது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸை கௌபாய் மீது பெரும் ஈடுபாடு கொண்ட ஒரு நபராக காட்டியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். அதற்காக ஹாலிவுட்டின் பிரபல  கௌபாய் நடிகரான க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை படத்தில் பல இடங்களில் பயன்படுத்தி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அவரின் கௌபாய் திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவை.

டாலர் ட்ரய்யாலஜி என்னும் மூன்று படங்கள் அடங்கிய அவரது திரைப்படங்கள் உலகம் முழுக்க பிரபலமானவையாகும். இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸில் ஜிகர்தண்டா வெளியாகி தற்சமயம் மீண்டும் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. இதற்கு நடுவே ரசிகர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் க்ளிண்ட் ஈஸ்டு உட்டை குறிப்பிட்டு இந்த திரைப்படத்தில் உங்களை குறித்து நிறைய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது முடிந்தால் பாருங்கள் என்று கிளினிட் ஈஸ்ட் உட்டிற்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நான் ஒரு படபிடிப்பில் இருக்கிறேன். அது முடிந்து கண்டிப்பாக அந்த திரைப்படத்தை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த பதில் கார்த்திக் சுப்புராஜிற்கு சற்று அதிர்ச்சியாக இருந்துள்ளது கார்த்திக் சுப்புராஜ் கூறும் பொழுது எப்போது க்ளிண்ட் ஈஸ்ட் உட் அந்த படத்தை பார்த்து அது குறித்து பேசுவார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறி உள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top