கூலி படத்தின் கதை இதுதான்.. ட்ரைலரில் லீக் ஆன படக்கதை..!

நேற்று ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்த அப்டேட் வந்த நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் யார் வில்லம் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை.

ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு கதை அமைப்பு கொண்ட திரைப்படம் என்பது மட்டும் டிரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அதன்படி தேவா என்கிற கதாபாத்திரம் பல பெரிய விஷயங்களை செய்து கேங்ஸ்டர் கும்பலுடன் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்ட ஒருவராக அறியப்படுகிறார்.

Social Media Bar

ஆனால் சில காலங்களுக்கு பிறகு தேவா காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. பாட்ஷா திரைப்படத்தில் வருவது போலவே தேவா இறந்துவிட்டார் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேவா ஒரு துறைமுகத்தில் கூலி வேலை பார்ப்பவராக பல வருடங்களாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்னும் சாகவில்லை என்கிற செய்தி இந்த ரவுடி கும்பலுக்கு மீண்டும் தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர் அந்த துறைமுகத்தில் தான் வேலை பார்க்கிறார் என்கிற செய்தியும் வருகிறது.

இதனை அடுத்து தேவா மீண்டும் களத்தில் இறங்குகிறார் அதற்கு பிறகு அவர் எப்படி இந்த வில்லன்களை ஒழிக்கிறார்என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று பேசப்படுகிறது.