News
தனுஷ் பட நடிகை வீட்டில் நகைகள் கொள்ளை! – மொத்த மதிப்பு இவ்வளவா?
தனுஷுடன் “அம்பிகாபதி” படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சோனம் கபூர். இந்தியில் பிரபல நடிகரான அணில் கபூரின் மகளான இவர் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தனுஷுடன் “அம்பிகாபதி” என்ற படத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் திருமணமான சோனம் கபூர் நடிப்பத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். தற்போது அவர் கர்ப்பமாகவும் உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் கோடிக்கணக்கில் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதியே நகைகள் திருடுபோனது தெரியவந்தாலும், பிப்ரவரி 23ம் தேதி அன்றே புகார் அளிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸார் இந்தியா முழுவதும் 9 பேரை கைது செய்துள்ளனர். தற்பொது சோனம்கபூர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2.4 கோடி என தெரிய வந்துள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
