News
எதர்ச்சையா வச்ச சீனு செம ஃபேமஸ் ஆயிட்டு… – படையப்பா குறித்து கூறிய கே.எஸ் ரவிக்குமார்!
சமூக வலைத்தளங்களில் ஏன் எதற்கென்றே தெரியாமல் சில வீடியோக்கள் பிரபலமாகும். அதை போல ஏன் எதற்கு என்றே தெரியாமல் சில காட்சிகள் சினிமாவில் பிரபலமாகும்.
உதாரணத்திற்கு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை கூறலாம். அதை விட சிரிப்பான பல காமெடிகளை கவுண்டமணி செந்தில் செய்திருந்தாலும் அந்த காமெடி மிகவும் பிரபலம்.
அதே போல படையப்பா திரைப்படத்தில் பிரபலமான ஒரு காட்சி உண்டு. நீலாம்பரியை பார்க்க படையப்பா வருவார். அதை அறிந்துக்கொண்ட நீலாம்பரி அங்கு இருக்கும் அனைத்து நாற்காலிகளையும் எடுத்துவிடுவார்.
அப்போது அங்கு வரும் படையப்பாவிற்கு அமர எதுவும் இருக்காது. உடனே தனது துண்டை எடுத்து மேலே கட்டி இருக்கும் ஊஞ்சலை இழுத்து அதில் அமர்வார். அந்த காட்சியை வைக்கும் யோசனையே முதலில் கே.எஸ் ரவிக்குமாருக்கு இல்லை.
ஓரத்தில் ஒரு ஷோபாவை வைத்து அதை ரஜினி துண்டால் இழுப்பது போலதான் காட்சி வைக்க ஏற்பாடாகி இருந்தது. அப்போதுதான் எதார்ச்சையாக அந்த ஊஞ்சலை பார்த்தார் கே.எஸ் ரவிக்குமார். அந்த ஊஞ்சலில் அவர்வது போல காட்சி வைத்தால் நன்றாக இருக்குமே என முடிவு செய்தார்.
அதன் பிறகு அதே போல ரஜினிகாந்த் ஊஞ்சலில் அமரும் சீன் காட்சியாக்கப்பட்டது. அதோடு ஏ.ஆர் ரகுமானின் இசையை சேர்த்து திரையில் அந்த காட்சி வந்தபோது வேற லெவல் ரெஸ்பான்ஸை பெற்றது அந்த காட்சி. இதுக்குறித்து கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது ஏன் அந்த காட்சி இவ்வளவு வரவேற்பை பெற்றது என தெரியவில்லை என்கிறார்.
