Connect with us

என்னதான் நீ மதிக்கலையே… பாக்கியராஜின் படத்தை நிராகரித்த இளையராஜா…

News

என்னதான் நீ மதிக்கலையே… பாக்கியராஜின் படத்தை நிராகரித்த இளையராஜா…

Social Media Bar

தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் இசைக்காகவே திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டங்கள் உண்டு. அந்த அளவிற்கு இளையராஜாவின் இசையின்மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் மக்கள்.

இந்த நிலையில் அவரது தம்பி கங்கை அமரனும் கூட சினிமாவில் இசையமைக்க துவங்கினார். ஆரம்ப காலம் முதலே இயக்குனர் பாக்கியராஜ்க்கும் கங்கை அமரனுக்கும் நல்ல பழக்கம் இருந்தது. எனவே பாக்கியராஜ் இயக்கிய சுவரில்லா சித்திரங்களில் துவங்கி தொடர்ந்து அவரது படங்களுக்கு கங்கை அமரன்தான் இசையமைத்து வந்தார்.

சுவரில்லா சித்திரங்கள் படத்திலேயே அவரது இசையில் வெளிவந்த காதல் வைபோகமே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்கியராஜின் திரைப்பட கதைகள் நன்றாக இருப்பதை கண்ட இளையராஜா அவருக்கும் வாய்ப்பு கொடுக்கும்படி பாக்கியராஜிடம் கேட்டுக்கொண்டார்.

இளையராஜாவிற்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்கும்போது வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார் பாக்கியராஜ். அதே போல தாவணி கனவுகள் திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ஆனால் அந்த கதையை எழுதும்போதே அதற்கு கங்கை அமரன் தான் இசையமைக்க வேண்டும் என அவரிடம் பேசி முடிவு செய்துவிட்டார் பாக்கியராஜ்.

ஆனால் ஏ.வி.எம் நிறுவனம் இளையராஜாதான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டது. எனவே இதுக்குறித்து கங்கை அமரனிடம் பேசியுள்ளார் பாக்கியராஜ். கங்கை அமரனும் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால் இளையராஜா இதற்கு சம்மதிக்கவில்லை. முதலிலேயே நீ ஏன் என்னிடம் வரவில்லை என சண்டை போட துவங்கிவிட்டார். பிறகு அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது என தனது பேட்டியில் கூறியுள்ளார் பாக்கியராஜ்

Articles

parle g
madampatty rangaraj
To Top