News
முப்பத்தி அஞ்சே நாளில் சாதிச்சுட்டேன்? வீடியோ வெளியிட்ட இளையராஜா!..
தமிழில் முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு எப்போதுமே தனித்த இடம் ஒன்று இருக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் இசை வளர்ச்சியில் இளையராஜாவிற்கும் பெரிய பங்கு உண்டு.
கடந்த சில நாட்களாக இளையராஜா குறித்த சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்துக்கொண்டிருந்தன. கவிஞர் வைரமுத்துதான் அதை துவங்கி வைத்திருந்தார். ஒரு பட விழாவில் கலந்துக்கொண்ட வைரமுத்து ஒரு பாடலில் இசை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாடல் வரிகளும் முக்கியம் என பேசியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்து பேசியிருந்த கங்கை அமரன் ஏறி வந்த படிக்கட்டுகள் மீதே அவதூறு பரப்புகிறார் வைரமுத்து. நிழல்கள் திரைப்படத்தில் வைரமுத்துவிற்கு இளையராஜா வாய்ப்பு கொடுத்ததால்தான் அவர் இப்போது கவிஞராக இருக்கிறார் என பேசியிருந்தார். ஆனால் இளையராஜா அதற்கு எதிர்வினையும் காட்டாமல் இருந்தார்.
இன்னும் பல பிரபலங்கள் இதுக்குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று இதுக்குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இளையராஜா. அதில் அவர் கூறும்போது இத்தனை நாட்களாக பலரும் என்னை பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள் என கேள்விப்பட்டேன்.
ஆனால் அந்த சமயங்களில் நான் ஒரு புது சிம்பனியை உருவாக்கும் வேலையில் இருந்தேன். 35 நாட்களில் ஒரு சிம்பனியை உருவாக்கியுள்ளேன். படத்திற்கு இசையமைப்பது வேறு, பிண்ணனி இசை வேறு அந்த மாதிரி சிம்பனி என்பது வேறு.
இந்த படங்களில் அமைத்த இசை ஏதாவது அதில் வந்துவிட்டால் அது சிம்பனியாக இருக்காது என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
