Tamil Cinema News
இளையராஜா ஒரு மட்டமான மனிதர்.. சரவெடியாக பேசிய திரைப்பிரபலம்!
தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலும் போற்றப்படும் இசையமைப்பாளராக இளையராஜா இருந்து வருகிறார். இசையின் கடவுளாகதான் இளையராஜாவை தமிழ் இசை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
அப்படி இருந்தாலும் கூட இளையராஜா பல சமயங்களில் பேசும் விஷயங்கள் அதிக சர்ச்சையாகி விடுகின்றன. இந்த நிலையில் இளையராஜாவின் பேச்சு குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது நிஜ வாழ்க்கையில் இளையராஜா ஒரு மட்டமான மனிதர் இசையை பொருத்தவரை இளையராஜாவை நான் குறை சொல்ல முடியாது. அது என்னுடைய குருவை நானே குறை சொல்வது போல் ஆகிவிடும். அந்த அளவிற்கு இசையில் மிக முக்கியமானவர் இளையராஜா.
ஆனால் இளையராஜாவை திரைத்துறையில் இருக்கும் பலரே பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள் சாமி என்றுதான் அழைப்பார்கள். ஏனெனில் ஆன்மீகத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு கொண்டவர் இளையராஜா.
ஆன்மீகம் என்பது ஒருவருக்கு பொறுமையையும் நிதானத்தையும் கொடுக்க வேண்டும். ஆனால் இளையராஜா நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை சமீபத்தில் கூட அமெரிக்காவிற்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அமெரிக்கர்கள் கிறிஸ்துவ மதத்தைதான் போற்றி வருகின்றனர்.
இயேசுவின் மறுபிறப்பு போன்றவை தான் அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அங்கு சென்ற இளையராஜா இயேசு மறுபிறப்பு எடுத்தாரா? இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் ரமண ரிஷி மறுபிறவி எடுத்தார் என்று பேசியிருக்கிறார்.
எந்த ஒரு ஆன்மீகவாதியாவது இப்படி பேசுவார்களா என்று வெளிப்படையாக கேட்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பேச்சை இப்பொழுது சர்ச்சையாகி வருகிறது.
