News
என்னயா ஒரே கொடுமை குஸ்காவா இருக்கு… ஆபாச வசனங்கள் நிரம்பி வழியும் பிரபுதேவா பாடல்.. சின்ன புள்ளைங்க கேட்டுறாதீங்க..!
சினிமா துவங்கிய காலகட்டம் முதலே பாடல் வரிகளுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருந்து வந்தது. பாடல் வரிகள் என்பது இசைக்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டும். அதே சமயம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் கவித்துவமாகவும் இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதனால் நல்ல நல்ல வரிகளை பாடல் வரிகளாக அமைத்து பாடல்கள் எழுதப்பட்டன. மேலும் பல முக்கியமான விஷயங்களை சின்ன ஒரு பாடல் வரியின் மூலமாக தெரிவிப்பது ஒரு கலையாக இருந்தது. அதனால்தான் கண்ணதாசன் மாதிரியான பல பாடல் ஆசிரியர்கள் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர்களாக இருந்து வந்தனர்.
ஜாலியோ ஜிம்கானா பட பாடல்:
ஆனால் இப்போதைய தலைமுறையினர் மத்தியில் பாடல் ஆசிரியர்களுக்கு மதிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. ஏதாவது ஒரு வரியை இசைக்கு தகுந்தார் போல எழுதி வைத்துவிட்டு அதை பாடல் வரிகள் என்று கூறுகின்றனர். இதனால் பாடல் வரிகளின் தரம் என்பது தற்சமயம் தமிழ் சினிமாவில் மொத்தமாகவே குறைந்துவிட்டது.
இந்த நிலையில் தற்சமயம் பிரபுதேவா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜாலியோ ஜிம்கானா என்கிற திரைப்படத்தில் வந்திருக்கும் போலீஸ் காரன கட்டிகிட்டா பாடல் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல் வரிகளைக் கொண்டு இருக்கின்றன.
ரசிகர்கள் பலருக்குமே இது முகம் சுளிக்கும் விதமாக இருக்கிறது இருந்தாலும் 2k கிட்ஸ் மத்தியில் இந்த பாடலுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
