Connect with us

இனிமே இப்படிதான் இருப்பாரா உலக நாயகன் – கவலையில் ரசிகர்கள்

News

இனிமே இப்படிதான் இருப்பாரா உலக நாயகன் – கவலையில் ரசிகர்கள்

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஒரு நடிகராக பேசப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் ஒரு நடிகனால் அனைத்து வித கதாபாத்திரமும் நடிக்க முடிய வேண்டும் என்கிற வரையறையே ஒரு சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

அழுதல், சிரித்தல், கோபப்படுதல், பணக்காரன், பிச்சைக்காரன், போலீஸ், திருடன் என அனைத்து வகையிலும் நடிக்க கூடிய சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் இருந்தார். அவருக்கு அடுத்து

அப்படி ஒரு நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். கமல்ஹாசனும் சிவாஜி கணேசனை போலவே பல்வேறு புதிய கதாபாத்திரங்களில் நடித்து அதற்கென தனி புகழ் பெற்றவர்.

ஆளவந்தான், குணா, தசாவதாரம், உன்னை போல் ஒருவன், ஹே ராம் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அதிகப்பட்சம் இந்த மாதிரியான திரைப்படங்கள் காரணமாகவே அவருக்கு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது. இந்நிலையில் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் தற்சமயம் 600 கோடிகளை தாண்டி ஓடியுள்ளது.

இது முழுக்க முழுக்க கமல் பாணிக்கு எதிரான படம் என கூறப்படுகிறது. பொதுவாக ஒரு ஹீரோ 50 பேரை அடிப்பது போல் இருக்கும் தமிழ் சினிமாவில் மாறுப்பட்டவர் கமல் என்ற பெயர் இருந்தது. ஆனால் இந்த படம் வழக்கமான தமிழ் சினிமா மாதிரி உள்ளதால் இனி கமலும் இந்த மாதிரியான படங்களில்தான் நடிப்பாரோ என ரசிகர்கள் சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கமல் இப்போதும் புது வகையான திரைக்கதை கிடைத்தால் நடிக்க தயாராகவே இருப்பார் எனவும் ஒரு பக்கம் பேசப்படுகிறது.

Bigg Boss Update

To Top