News
அதை வச்சி ஜோக் பண்ணுனா மரியாதை கெட்டுரும்.. கார்த்திக்கு வார்னிங் கொடுத்த பவண் கல்யாண்..!
ஆந்திர தேசத்தில் திருப்பதி லட்டு குறித்த விவகாரங்கள் அதிக பிரச்சனையை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கின்றன. திருப்பதியில் மாட்டின் கொழுப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
இது பக்தர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகின்றன. பெரும்பாலும் சாதாரண மக்கள்தான் திருப்பதிக்கு பெருமாளை வணங்குவதற்கு அதிகமாக சென்று வருகின்றனர்.
அதனால் லட்டில் அசைவம் சேர்க்கப்பட்டிருப்பது என்பது அவர்களுக்கு கூட பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆனால் சைவம் மட்டுமே சாப்பிடும் சிலருக்கு இது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. மேலும் பெரும் அதிர்ச்சியையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

Karthi
கார்த்தி கூறிய பதில்
இதை சரி செய்ய தீட்டை கழிக்கும் விஷயங்களை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இதற்கு நடுவே திருப்பதி லட்டு குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கார்த்தியிடம் ஒரு விழாவில் திருப்பதி லட்டு வேண்டுமா என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி திருப்பதி லட்டும் மிகவும் சென்சிட்டிவான ஒன்று அது எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்த நிலையில் இதை இந்த பேட்டி குறித்து பதில் அளித்த பவன் கல்யாண் கூறும்போது திருப்பதி லட்டை விளையாட்டாக பேசாதீர்கள்.
இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங் இனி எங்கேயும் லட்டை வைத்து எல்லாம் காமெடி செய்யக்கூடாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு கார்த்தியும் ஒரு பதிலை அளித்து இருக்கிறார்.
