Latest News
சி.எம் ஆன பிறகும் சினிமா ஆசை போகல!.. சிவாஜி படத்தை பார்க்க காத்து கிடந்த எம்.ஜி.ஆர்!..
தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பாக்யராஜ். இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது அனைத்து படங்களும் குடும்பம் சார்ந்த கதைகளை கொண்டதாகவே இருக்கும்.
இதனாலேயே குடும்ப ரசிகர்களுக்கு இவரது திரைப்படம் மீது ஒரு ஆர்வம் உண்டு சிவாஜி கணேசனோடு சேர்ந்து ஒரு முறையாவது படத்தில் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை அப்போது தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்குமே இருந்தது.
அந்த ஆசை நடிகர் பாக்யராஜிக்குமே இருந்தது எனவே தாவணி கனவுகள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமான கேப்டன் என்கிற கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனை நடிக்க வைத்தார். அப்பொழுது அவர் எம்.ஜி.ஆரிடமும் நல்ல பழக்கத்தில் இருந்தார்.
அதனால் எம்.ஜி.ஆருக்கும் பாக்கியராஜுக்கும் சண்டை ஏற்பட போகிறது அவர் எதற்காக சிவாஜியை வைத்து படம் இயக்குகிறார், என்று பலரும் பலவாறு பேசத் தொடங்கினர். ஆனால் உண்மையில் எம்.ஜி.ஆர் அந்தப் படத்திற்காக வெகுவாக காத்திருந்தார்.
அவர் பாக்கியராஜிடம் வந்து எப்பொழுது படப்பிடிப்பு முடியும் நான் அந்த படத்தின் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். பிறகு அந்த படம் வந்த பிறகு அதற்காக பாக்கியராஜை வெகுவாக பாராட்டியுள்ளார் எம்.ஜி.ஆர்.