Hollywood Cinema news
ஏ.ஐக்கு எதிரான மிகப்பெரிய போர்.. மிஷன் இம்பாசிபல் இறுதி பாகத்தின் (Mission: Impossible – The Final Reckoning) கதை..!
தற்சமயம் பொதுமக்கள் அச்சப்படும் ஒரு விஷயமாக ஏஐ எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படும் என்பது குறித்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன.
ஆனால் பல வருடங்களாக ஆக்சன் பிளாக் திரைப்படமாக வந்து கொண்டிருக்கும் மிசின் இம்பாசிபிள் திரைப்படத்தில் அதை ஒரு வில்லனாக வைத்தது என்பது இப்பொழுது அந்த கதையின் போக்கையே மாற்றி அமைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இதுவரை மெஷின் இம்பாசிபிலில் கதையின் நாயகன் எனப்படும் கதாநாயகன் சந்திக்கும் வில்லன்கள் எல்லாருமே அவரால் எதிர்க்க முடியக்கூடிய ஒரு வில்லனாக தான் இருந்திருக்கின்றனர்.
ஆனால் இப்பொழுது வருகிற இந்த ஏஐஆனது ஒரு மனிதனே கிடையாது என்னும்போது அதை ஈத்தன் ஹன்ட் எப்படி எதிர்க்க போகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
என்டிடி எனப்படும் அந்த ஏஐக்கு உலகமே பயந்து வரும் நிலையில் அந்த ஏயை கதாநாயகனை பார்த்து பயப்படுகிறது. அது ஏன் என்பது குறித்து இதற்கு முன்பு 2023 இல் வெளியான மிஷின் இம்பாசிபில் டெத் ரக்னாராக் பாகம் ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வருடம் மெஷின் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கானிங் (Mission: Impossible – The Final Reckoning) திரைப்படம் வரவிருக்கிறது. மெஷின் இம்பாசிபல் திரைப்படத்தில் இறுதி பாகமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
நடிகர் டாம் குரூஸுக்கும் வயது அதிகமாக இருப்பதால் இந்த படத்தில் இந்த படத்தோடு அவர் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தை முடித்து வைக்கிறார் இந்த நிலையில் இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. தமிழில் இந்த படத்தின் டிரைலருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை ஆனால் டிரைலரை பார்க்கும் பொழுது கண்டிப்பாக திரைப்படம் மிகப்பெரிய வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
