Latest News
சோழ ராஜ்ஜூயத்திடம் தோற்ற ப்ரிட்டிஷ் ப்ரின்ஸ்..!
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
முதல் நாளில் இருந்தே ஹிட் அடித்து வந்த பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு பிறகும் கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் நிலையிலேயே ஓடி கொண்டிருந்தது.
இதற்கு நடுவே தீபாவளியை முன்னிட்டு சர்தார் மற்றும் ப்ரின்ஸ் திரைப்படங்கள் வந்ததால் பொன்னியின் செல்வன் 100க்கும் குறைவான திரையரங்குகளில் ஓடியது. சர்தார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் ப்ரின்ஸ் திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் முக்கால்வாசி திரையரங்குகளில் ப்ரின்ஸ் திரைப்படத்தை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இன்னமும் வரவேற்பு இருப்பதால் மீண்டும் அந்த படத்தையே ஓட்டுகின்றனராம் திரையரங்கு உரிமையாளர்கள்.
தற்சமயம் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஓடுகிறது. 1 கோடிக்கும் அதிகமாக தினமும் வசூலித்து வருகிறது.