
லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படம் விக்ரம். கடந்த ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் 400 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்தது.

வெகுநாள் கழித்து கமல் நடித்த படம் என்றாலும் நினைத்ததை விடவும் அதிக வெற்றியை தந்தது. அந்த நேரத்தில் வேறு எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை என்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியானது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் ஆகியிருக்கும் நிலையில் 500 கோடியை வசூலித்து விக்ரம் வசூலை முறியடித்துள்ளது பொன்னியின் செல்வன். இருந்தாலும் படம் ஆயிரம் கோடியை தொடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 500 கோடிக்கு ஓடியிருப்பது ஏமாற்றமாக இருக்கிறதாம்.
ஏனெனில் எந்த தமிழ் படமும் இதுவரை ஆயிரம் கோடி வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது.