News
நடிக்கிற படம் எல்லாம் ரெண்டு பாகம் போகுது.. கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ப்ளீஸ் – புலம்பும் கார்த்தி
நடிகர் கார்த்தி நடித்து வெளிவரும் படங்கள் எல்லாம் வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சூர்யாவை விடவும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கார்த்தி என கூறப்படுகிறது.

முத்தையா தயாரிப்பில் கார்த்தி நடித்து வெளிவந்த விருமன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது. அதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதிலும் கூட கதையின் முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தை கார்த்தி ஏற்று நடித்திருந்தார்.
பிறகு தற்சமயம் வந்த சர்தார் படமும் கூட கார்த்திக்கு நல்ல படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக படம் நடிப்பதிலேயே போய் கொண்டிருப்பதால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நினைத்திருந்தாராம் கார்த்தி.
ஆனால் அடுத்து கைதி 2, சர்தார் 2 என இரண்டாம் பாகங்களுக்கு நடிக்க தயாராக வேண்டிய சூழலில் இருக்கிறார் கார்த்தி. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கும் இன்னும் சில டப்பிங் வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஓய்வே இல்லை என புலம்புகிறாராம் கார்த்தி
