Connect with us

எனக்கு கொடுக்குற சம்பளத்துல ஏழைகளுக்கு வேட்டி வாங்கி கொடுங்க!.. பணம் வாங்காமல் நடித்த ராஜ்கிரண்!..

Cinema History

எனக்கு கொடுக்குற சம்பளத்துல ஏழைகளுக்கு வேட்டி வாங்கி கொடுங்க!.. பணம் வாங்காமல் நடித்த ராஜ்கிரண்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன காலம் முதல் மார்க்கெட் குறையாமல் இருக்கும் நடிகராக ராஜ்கிரண் இருக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண் முதலில் திரைப்படங்களை தயாரிக்கதான் ஆசைப்பட்டார்.

ஆனால் பிறகு அவரே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார். கிராமத்து பாணியில் சரியாக கிராமத்து பாஷையை பேசும் நடிகராக இருந்ததால் அவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் உடனே வரவேற்பு கிடைத்தது.

இப்போது வரை சினிமாவில் ராஜ்கிரண் நடித்துக்கொண்டேதான் இருக்கிறார். அவரது நடிப்பு இப்போதும் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கிறது. மக்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் நடிகர் ராஜ்கரண்.

இப்படியிருக்கும்போது ராம்ராஜ் நிறுவனம் ஒருமுறை வேட்டி விளம்பரம் எடுப்பதற்காக ராஜ்கிரணை வந்து சந்தித்துள்ளது. அப்போது ராஜ் கிரண் இந்த விளம்பரத்திற்கு சரியாக இருப்பார் என்றும் அதற்காக ராஜ்கிரணுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறினர்.

அதை கேட்ட ராஜ்கிரண் எனக்கு சம்பளம் கொடுத்துவிட்டு அதை வேட்டி விலையில் சேர்த்துவிடாதீர்கள். நான் சம்பளம் இல்லாமலே நடிக்கிறேன். ஆனால் அதற்காக வேட்டி விலையை குறைத்து விற்பனை செய்யுங்கள். அப்போதுதான் ஏழை மக்களும் வேட்டி வாங்கி உடுத்த முடியும் என கூறியுள்ளார்.

இந்த செய்தியை தமிழா தமிழா பாண்டியன் ஒரு நேர்க்காணலில் கூறியுள்ளார்.

To Top