Cinema History
இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் எல்லாம் கலைஞனே கிடையாது!.. காசுக்காக என்னலாம் பண்ணிருக்காங்க தெரியுமா!. கொதித்து போன பத்திரிக்கையாளர்!..
தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைகளையே சந்திக்காத பிரபலங்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் ஒருவர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நடத்திய இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சிக்கு அதிக டிக்கெட்டுகளை விற்றனர்.
ஆனால் அதற்கு ஏற்ற அளவு இருக்கைகள் இல்லாத காரணத்தால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறும்போது இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் இருவருமே கலைஞர்களே கிடையாது. அவர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்கவே பார்க்கின்றனர்.
இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணை புரத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக நன்கொடை கேட்டு அந்த ஊர் காரர்கள் இளையராஜாவை பார்க்க வந்தனர். அப்போது இளையராஜா அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அனுப்பி வைத்தார்.
ஆனால் ஸ்ரீ ரங்கத்துக்கு நன்கொடையாக லட்சங்களை கொடுத்தார். ஆனால் அங்கு இவரது சாதியை அடையாளம் காட்டி உள்ளயே விடவில்லை. அதே போல இலங்கை தமிழர்கள் விடுதலைக்காக போராடி கொண்டிருந்தப்போது இங்கிருந்து சென்று சிங்களர்களுக்காக பாட்டு பாடினார் ஏ.ஆர் ரகுமான்.
இப்படி சமூகம் சார்ந்து சிந்தனை இல்லாமல் காசை மட்டுமே பார்ப்பவர்களை எப்படி கலைஞர்கள் என கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிக்கையாளர் பாண்டியன்.