Latest News
12 பேர் அன்னைக்கு செத்துருக்க வேண்டியது!.. மார்க் ஆண்டனி படத்தில் நடந்த விபத்து!.
எஸ்.ஜே சூர்யா தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஒரு காலத்தில் பெரும் இயக்குனராக இருந்த எஸ்.ஜே சூர்யா நடிகரான பிறகும் கூட நியூ, அன்பே ஆருயிரே என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.
ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தால் பெரும் வீழ்ச்சியை சந்தித்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி திரைப்படம் இவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது.
அதன் பிறகு அடுத்து ஒரு டர்னிங் பாயிண்டாக ஸ்பைடர் திரைப்படம் அமைந்தது. தற்சமயம் அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றியை கண்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.
இவர் ஒரு பேட்டியில் கூறும்போது க்ளைமேக்ஸ் காட்சிக்காக ஒரு லாரியை ஏற்பாடு செய்திருந்தோம். நானும் விஷாலும் நிற்போம் எங்களுக்கு எதிரே லாரி சுவற்றை உடைத்துக்கொண்டு வர வேண்டும். அதே போல லாரியும் வந்தது. ஆனால் அந்த ட்ரைவர் ப்ரேக்கை அழுத்தாமல் மறந்து ஆக்ஸலரேட்டரை அழுத்திவிட்டான்.
அதனையடுத்து லாரி வேகமாக என்னையும் விஷாலையும் நோக்கி வந்தது. ஆனால் ட்ரைவர் லாவகமாக லாரியை வலதுப்பக்கம் திருப்பினார். ஆனால் வலதுப்பக்கமும் ஆட்கள் நின்றனர். விபத்து நடந்தது. எப்படியும் ஒரு 12 பேராவது காலி என நான் நினைத்தேன்.
ஆனால் நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.