News
கமலை எல்லாம் என் படத்தில் நடிக்க வைக்க மாட்டேன் – பளிச்சென்று கூறிய பாலா.!
தமிழின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா படத்தில் நடிக்கும் நடிகர் எவரும் பிரபலமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில் தமிழின் மிக பிரபலமான நாவலான குற்ற பரம்பரை நாவலை திரைப்படமாக இயக்கலாம் என முடிவு செய்தார். அந்த படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தாராம் பாலா. எனவே இதுக்குறித்து பாலா கமல்ஹாசனிடம் பேசியுள்ளார்.
கமல்ஹாசனுக்கும் இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்துபோகவே இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் கமலை நடிக்க வைப்பதற்கு திடீரென மறுப்பு தெரிவித்துள்ளாராம் பாலா.
ஏனெனில் கமல்ஹாசன் திரைக்கதையில் ஏதாவது வேலையை பார்த்துவிடுவார். நம் போக்குக்கு படத்தை எடுக்க விட மாட்டார் என யோசித்தாராம். ஆனால் தற்சமயம் அந்த கதை பாலாவிடம் இருந்து மாறி ஒரு ஒ.டி.டி நிறுவனத்திடம் சென்று விட்டதாம்.
இந்நிலையில் இந்த கதை வெப் சீரிஸாக வர இருப்பதாக கூறப்படுகிறது.
