News
கேன்சரால் இனி உயிர் போகாது..அனைவருக்கும் ஊசி இலவசம்.. மிரள வைத்த ரஷ்யா..!
தொடர்ந்து மனிதர்களுக்கு எதிராக உருவாகும் உயிர் கொல்லி நோய்களை சமாளிப்பதன் மூலமாகதான் மனித இனம் தொடர்ந்து பெருகி வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு தொற்று நோய்க்கும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து நாம் பிறக்கும் போதே நமக்கு அதை செலுத்திவிடுகின்றனர். அதன் மூலமாக அந்த நோய் நம் மீது பரவாத அளவிற்கு உடலை மாற்றுகிறது தடுப்பூசி.
இதற்கு முன்பு மனிதர்களை அதிகமாக இறப்புக்கு உள்ளாக்கிய காலரா, அம்மை நோய் போன்ற நோய்களை எல்லாம் இப்படித்தான் சரி செய்தனர் ஆனாலும் நூற்றாண்டு காலமாக மனிதர்களால் சரி செய்ய முடியாத பிரச்சனையாக இருப்பது இந்த புற்றுநோய்.
புற்றுநோய்க்கு மருந்து:
புற்றுநோய் வந்து விட்டது என்றாலே அவர் சீக்கிரத்தில் இறந்து விடுவார் என்பதுதான் இப்போதைய நிலை ஆக இருக்கிறது. அதற்கான தடுப்பூசிகள் எல்லாம் இருக்கிறது என்றாலும் அவை முழுதாக புற்றுநோயை தடுக்கக்கூடியது கிடையாது.
நமது வாழ்நாளை கொஞ்சமாக அது நீட்டிக்கும் அவ்வளவுதான் இப்படி இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் புற்றுநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கான தடுப்பூசியை கண்டறிவது குறித்த ஆய்வுகள் சென்று கொண்டிருந்தன.
இந்த நிலையில் ரஷ்யாவின் அதிபராக புதின் ஒரு விழாவில் பேசும்பொழுது புற்றுநோய்க்கான தடுப்பூசியை பொருத்தவரை நாங்கள் வெற்றியை நெருங்கி விட்டோம். இன்னும் சில நாட்களில் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறி இருக்கிறார்.
மேலும் அதை இலவசமாக வழங்க ரஷ்யா அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது இது மருத்துவத் துறையில் கண்டிப்பாக மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
