இதுவரை வந்த எல்லா படத்தையும் ப்ரேக் பண்ணும் சலார் – தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடைந்த வெற்றியை தொடர்ந்து மிகவும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

Social Media Bar

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்துக்கொண்டுள்ளன. தற்சமயம் இவர் தெலுங்கு நட்சத்திரம் பிரபாஸை வைத்து இயக்கி வரும் திரைப்படம் சலார்.

கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதற்கடுத்து ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் பிரசாந்த் நீல்.

இந்த நிலையில் ஹம்பாலே நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் கிரகந்தூர் ஒரு பேட்டியில் கூறும்போது “சலார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு புதிய சாதனையை படைக்கும். இதுவரை ஓடிய பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்களை மிஞ்சி அந்த படம் ஓடும்” என கூறியுள்ளார்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 28 2022 அன்று இந்திய அளவில் வெளியாவதற்காக தயாராகி வருகிறது. படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.