தமிழ் பொண்ணா இருந்தும் தமிழில் எதுவும் சாதிக்கல?- வருத்தப்பட்ட சமந்தா!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை சமந்தா. சமந்தா நடிக்கிறார் என்றால் அதற்காகவே ஒரு ரசிக கூட்டம் அந்த படத்தை பார்க்கும் எனலாம்.

Social Media Bar

அதிலும் புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடல் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போன்றவற்றில் அதிக கவர்ச்சி காட்டியிருந்தார் சமந்தா.

இந்நிலையில் தற்சமயம் அவர் நடித்த யசோதா என்கிற திரைப்படம் தமிழில் வெளியாகியுள்ளது. முன்பு ஒரு பழைய பேட்டியில் பேசும்போது திரைத்துறை சார்ந்து பல விஷயங்களை பேசியிருக்கிறார் சமந்தா.

அந்த பேட்டி நடந்த சமயத்தில் நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்கள் மூலம் பிரபலமாகி இருந்தார். அப்போது கூறும்போது அவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வந்ததையும், இதனால் தமிழ் பெண்ணாக இருந்தும் கூட தமிழில் இன்னும் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இப்போதைக்கு பார்த்தால் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே அளவில் படம் நடித்துள்ளார் சமந்தா என கூறப்படுகிறது.