papri ghosh 2

படுக்கைக்கு அழைப்பவர்களை அப்படி பண்ணுவேன்..! வெட்கம் விட்டு கூறிய நடிகை.!

News Tamil Cinema News

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது பெருகி வருகிறது. நடிகைகள் சினிமாவிற்கு வருவதற்கே பயப்படும் நிலை இருந்து வருகிறது. நடிகை ஜெயலலிதா காலக்கட்டத்தில் சினிமா நடிகைகளை மக்கள் மதிக்கவே மாட்டார்களாம்.

அந்த நிலை இப்போதும் தொடர்வதற்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்கள்தான் காரணங்களாக அமைந்துள்ளன. சீரியல் நடிகைகள் பலருக்குமே சினிமாவிற்கு செல்வது என்பது இதனால் கஷ்டமான விஷயமாக இருந்து வருகிறது.

சீரியல் நடிகை:

இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல சீரியல் நடிகை பாப்ரி கோஸ் பளீரென்ற பதில் ஒன்றை அளித்துள்ளார். ஒரு பேட்டி ஒன்றில் அவரிடம்  சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாப்ரி கோஷ் கூறும்போது, ”யாராவது என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டார்கள் என்றால் நான் உடனே அதற்கு சம்மதம் சொல்லிவிடுவேன்.

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓ.கே:

பிறகு அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தார் முன்னிலையிலேயே அவருக்கு முத்தம் கொடுத்துவிடுவேன். இதனால் ஏன் அப்படி செய்தேன் என அவர்களது வீட்டில் உள்ளவர்கள் கேட்டார்கள் என்றால் அவர்தான் எனக்கு பட வாய்ப்பு தருவதாக இருந்தால் அட்ஜெஸ்ட்மெண்ட் வேண்டும் என்றார் என்பேன்” இவ்வாறு கூறியுள்ளார் பாப்ரி கோஸ்.

பாப்ரி கோஸ் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் சாட்டையடி பேச்சு தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.