Cinema History
ஐஸ்வர்யா ராயையும் என்னையும் வச்சி ஒரு படம் வேணும்!.. லிங்குசாமிக்கு ரஜினி சொன்ன கதை!..
சினிமா நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்குமே சினிமாவில் ஒரு ஆசை இருக்கும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான படம் அமைய வேண்டும் என்கிற ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும்.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் வந்து வளர்ந்து வரும் கதாநாயகர்கள் அனைவருமே ஒருமுறையாவது போலீசாக நடித்து விடுவார்கள். சினிமாவிற்கு வரும் அனைத்து நடிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும். அதனால் அவர்கள் வந்து சில நாட்களிலேயே போலீசாக ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விடுவார்கள்.
அதே போல சினிமா நடிகர்களுக்கு பல ஆசைகள் உண்டு. அதில் ரஜினிக்கு வெகு நாட்களாக இருந்து வந்த ஆசை ஒன்று உண்டு ரஜினிக்கு நடிகை ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
இந்த நிலையில் படையப்பா திரைப்படத்தின் கதையை எழுதும் போது அதில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய்தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தார் ரஜினி. ஆனால் அப்பொழுது ஐஸ்வர்யா ராய் பிஸியாக இருந்ததால் அதில் நடிக்க அவர் வரவில்லை.
அதனை தொடர்ந்து லிங்குசாமியிடம் இது பற்றி பேசி உள்ளார் ரஜினி அப்போது லிங்குசாமி ரஜினியுடன் பழக்கத்தில் இருந்தார். அப்பொழுது மங்கம்மா என்கிற ஒரு கதையை ரஜினியே கூறினார். படையப்பா போலவே அந்த திரைப்படத்திலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு கதையை ரஜினிகாந்த் கூறினார்.
ஆனால் அதற்கு இயக்குனர் லிங்குசாமி ஒப்புக்கொள்ளவில்லை அதன் பிறகு பாபா, சிவாஜி என பல படங்களில் முயன்று எந்திரன் திரைப்படத்தில் தான் இறுதியாக ரஜினியின் ஆசை நிறைவேறியது அதில் தான் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர்.